ஹீத்ரோ விமான நிலையத்தின் டெர்மினல் 2-க்கு ஒரு விமானத்தை இணைக்கும் ஜெட் பாலத்தின் அடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.அப்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்தது;
இதனால் அந்த விமானத்தில் தீப்பிடித்திருக்கக்கூடுமோ என்ற அச்சம் எழுந்தது.
அவசரக்கால மீட்புக் குழுவினர் அப்பகுதியை விரைந்து அடைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீயினால் எழுந்த பெரும் புகை மூட்டம் விமான நிலையத் தளத்திலும் முனையக் கட்டிடத்திற்கு அருகிலும் பரவியது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை ஹீத்ரோ விமான நிலைய செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
தீ விபத்து ஏற்பட்டபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் பணியாளர்கள் யாரும் இல்லை.
ஹீத்ரோ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: "இன்று மதியம், முனையம் 2-இல் (Terminal 2) உள்ள 'ஏர் பிரிட்ஜ்' (air bridge) எனப்படும் விமானம் ஏறும் நடைபாதை அமைப்புக்கு அடியில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து குறித்து அவசரக்கால சேவைக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்."

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக