புதன், 18 ஜூன், 2025

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாகவும் அதில் 20 இலட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், எஞ்சிய தொகையை செலுத்தாவிடின் குழந்தையை கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி, படல்கம பொலிஸ் பிரிவில் உள்ள மல்லவகெதரவில் வசிக்கும் முறைப்பாட்டாளர், நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பணியகத்திற்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இது தொடர்பாக, நீர்கொழும்பு பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சீதுவ பொலிஸ் பிரிவில் உள்ள தம்பத்துரை பகுதியில் நேற்று (17) நடத்திய சோதனை நடவடிக்கையில், ஒரு கோடி ரூபாவை கப்பமாக கோரிய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து படல்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தேக நபர்கள் 32 மற்றும் 46 வயதான மெட்டியகனே மற்றும் கொட்டுகொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

விசாரணையில், இந்த குற்றத்திற்காக இரண்டு திட்டமிட்ட குற்றவாளிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும், முறைப்பாட்டாளரை மிரட்ட இந்த பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரியவந்தது. மேலும், இந்த குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பொம்மை துப்பாக்கி, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கப்பமாக பெற்ற பணத்திலுருந்து கொள்வனவு செய்யப்பட்ட புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பல கையடக்க தொலைபேசிகள், அந்த தொலைபேசிகளில் உள்ள அனைத்து சிம் கார்டுகள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் கார்டுகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் அனைத்து ஆவணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை - அம்பேபுஸ்ஸ வீதி விபத்தில் பாதசாரி பலி!!

நேற்று  இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பாதசாரி பலத்த காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

 உயிரிழந்தவர் ஆண்டான்குளத்தைச் சேர்ந்த 56 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக 19 வயது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு உத்தியோகஸ்தர்களுக்கு விரைவில் Ai பயிற்சி.

வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள கூடியவாறான பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார் .

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் நகர்வு!!

கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. 

 இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. 

இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார்.

பேட்டரி உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்க இந்தியா வருகிறது ஜப்பான்.

பேட்டரி உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்க இந்தியா வருகிறது ஜப்பான் குழு. ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜப்பானைச் சேர்ந்த நிபுணர்கள் குழு இந்தியா வர உள்ளனர். 

30 ஜிகாவாட் பேட்டரி உற்பத்தியில் ஜப்பான் நிபுணர்கள் குழு இந்தியாவுக்கு உதவ திட்டம் வகுத்துள்ளது.

திங்கள், 16 ஜூன், 2025

360 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் கோளாறு!!

லண்டனில் (London) இருந்து சென்னைக்கு (Chennai) வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் லண்டன்- சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானத்திலே இவ்வாறு நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் புறப்பட்ட 37 நிமிடத்தில் மீண்டும் லண்டனில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் சென்னை வராமல் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 தற்போது, லண்டன், சென்னை இடையேயான விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி.

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் (Vraie Cally Balthazaar வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயராக விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.

சிவப்பு வணக்கம்

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்...