அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தவெகவில் இணைந்தார். அதிமுக பிரிந்தபோது ஓ.பி.எஸ்.ஆதரவாளராக சில மாதங்கள் செயல்பட்டு வந்தார் வெல்லமண்டி நடராஜன். ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் வெல்லமண்டி நடராஜன் எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
தொடர்ந்து, அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்து வெல்லமண்டி நடராஜன் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.
சீனப் பிரஜைகள் குழுவொன்றுக்குச் சொந்தமான வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபரான குறித்த பொறுப்பதிகாரியை வெயாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இந்தப் பொறுப்பதிகாரி தம்வசம் வைத்திருந்ததுடன், அவற்றை விடுவிப்பதற்காக ஒருவரிடம் 3 இலட்சம் ரூபா வீதம் பணம் கோரியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒரு பெண் மூலமாகவே பொலிஸ் பொறுப்பதிகாரி இந்தத் தொகையை கோரியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வசிக்கும் தெற்காசிய மற்றும் இந்திய வம்சாவளி வர்த்தகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு வந்த சர்வதேச மிரட்டல் கும்பலின் முக்கிய நெட்வொர்க்கை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்தியத்தில் வசிக்கும் தெற்காசிய வணிகர்கள் மற்றும் இந்திய சமூக மக்களைப் பணம் கேட்டு மிரட்டுதல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வந்தன.
இதனைத் தடுக்க அமைக்கப்பட்ட பீல் பிராந்திய காவல் துறையின் சிறப்பு மிரட்டல் தடுப்புப் பிரிவு, சர்வதேசக் குற்றக் கும்பல் ஒன்றுக்கு எதிராக நடத்திய பல மாத ரகசிய விசாரணையின் முடிவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரைக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் 'ஃபார் பிரதர்ஸ்' என்ற பயங்கரக் குற்றவியல் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2025 முதல் தொடங்கப்பட்ட இந்த 'புராஜெக்ட் பிளாட்டினம்' கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையில், கனடா நாட்டின் பீல் பிராந்திய காவல்துறை, ஒண்டாரியோ மாகாண காவல்துறை, கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை, நிதிப் பரிவர்த்தனை பகுப்பாய்வு மையம் மற்றும் அமெரிக்காவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ ஆகியவை இணைந்து செயல்பட்டன.
மூன்று ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு கனடா அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் கனடாவுக்குள் நுழைவதையும், அது நாட்டில் பரவுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 'புந்திபுக்யோ' வகை எபோலா வைரஸ் தேசிய தொற்றுநோய் நிலையை எட்டுவதற்கான அபாயம் "மிகவும் அதிகம்" என்று உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்தியப் பெருமுதலாளியான கவுதம் அதானி, 10 பில்லியன் டாலர்களை (84,000 கோடி ரூபாய்) அமெரிக்காவில் முதலீடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான அனைத்து குற்ற வியல் மற்றும் சிவில் வழக்குகளையும் அமெரிக்க நீதித்துறை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி குழுமம் மீதான நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை (DoJ) முழுமையாக கைவிட்டு விட்டது; போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், வழக்கை மேற்கொண்டு நடத்தத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் முடிவு செய்ததாலும் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதானி குழுமம் மீது அமெ ரிக்காவில் நடந்து வந்த அனைத்து சட்டப்பூர்வ விசாரணைகளிலிருந்தும் அதானி தப்பித்துக் கொண்டுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக-வின் ஆதரவால் உலகப் பணக்கா ரர்களில் ஒருவராக உயர்ந்த கவுதம் அதானி, அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி, கடந்த 2024 ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலர்களுக்கும் மேல் பணம் திரட்டியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீது குற்ற வியல் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டங்க ளுக்கான அனுமதியைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர்களை அதானி லஞ்சம் கொடுத்துள்ளார்.
அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற முதலீட்டை இவ்வாறு தவறான வழிகளில் அதானி பயன்படுத்தியுள்ளார் என்று அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் (SEC) சிவில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இவை மட்டுமல்லாமல், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அரபு அமீரகத்தைச்சேர்ந்த ஒரு வர்த்தகரிடமிருந்து ஈரான் எரிவாயுவை ஓமன் மற்றும் ஈராக் நாட்டு எரிவாயு என்ற பெயரில் வாங்கியதாகவும், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி அந்த வர்த்தகம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்தது.
இவ்வழக்குகளில் தனக்காக வாதாட, சல்லிவன் & குரோம் வெல் உள்ளிட்ட 5 முன்னணி அமெரிக்க சட்ட நிறுவனங்களை அதானி அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனங்கள் அதானியைக் காப்பாற்ற தீவிரமாக வேலை செய்து வந்த நிலையில் தான், 10 பில்லியன் டாலர் முதலீடு என்ற ‘சமரசத் திட்டம்’ மூலம் அனைத்து வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தால் அதானி மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த சில நாட்களஅமெரிக்க நீதித்துறையும், அதானி மீதான வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இதன்மீது மீண்டும் மேல்முறையீடு கோர முடியாது என்று வித் பிரிஜூடிஸ் (“With Prejudice”) என்ற முறையில் வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்கக் குற்ற வியல் நடைமுறைகளில் இதுபோன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவது மிகவும் அரிதானவை. ஒரு வழக்கை விரிவாக ஆய்வு செய்த பிறகு, அதை மேற்கொண்டு நடத்துவது தேவை யற்றது என்ற முடிவுக்கு வரும்போது மட்டுமே இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு அதானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
அதேபோல, எண்ணெய் வாங்கிய விவ காரத்தில் அதானி குழுமம் முழு ஒத்துழைப்பு வழங்கி, 275 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதால் அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.ுக்கு முன்பே, செய்திகள் வெளியாகின.
அதன்படியே தற்போது நடந்துள்ளது. 10 பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுத்து, அதானி தப்பித்துக் கொண்டுள்ளார்.அவர் அதானி அமெரிக்காவில் 10 பில்லி யன் டாலர்கள் (சுமார் 84,000 கோடி ரூபாய்) முதலீடு செய்ய விரும்புகிறார். ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை அவரால் முதலீடு செய்ய முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிக்குகள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி முறைமையூடாக முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹொர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) மீண்டும் முழுமையாகத் திறப்பது குறித்தும் கத்தார்தலைநகர் தோஹாவில் தீவிர இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) ஆகியோர் கத்தாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவுடனான முதற்கட்ட உடன்படிக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கு முன்னதாக, கத்தாரில் முடக்கப்பட்டுள்ள தங்களது 12 பில்லியன் டொலர் (Dollar) நிதிச் சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஈரான் முன்வைத்துள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், கத்தார் தற்போது மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஈரானிய மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) இந்த நிதி விடுவிப்பு மற்றும் ஹொர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து ஒழுங்குமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி (President) டொனால்ட் டிரம்ப் தரப்பில் உடன்படிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து சாதகமான கருத்துக்கள் வெளியான போதிலும், ஈரான் தனது முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படுவதை முதற்படியாக வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தையில் இன்னும் சில இழுபறிகள் நீடிக்கின்றன.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படலாம் என தோஹாவின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.