இதனைத் தடுக்க அமைக்கப்பட்ட பீல் பிராந்திய காவல் துறையின் சிறப்பு மிரட்டல் தடுப்புப் பிரிவு, சர்வதேசக் குற்றக் கும்பல் ஒன்றுக்கு எதிராக நடத்திய பல மாத ரகசிய விசாரணையின் முடிவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரைக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் 'ஃபார் பிரதர்ஸ்' என்ற பயங்கரக் குற்றவியல் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2025 முதல் தொடங்கப்பட்ட இந்த 'புராஜெக்ட் பிளாட்டினம்' கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையில், கனடா நாட்டின் பீல் பிராந்திய காவல்துறை, ஒண்டாரியோ மாகாண காவல்துறை, கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை, நிதிப் பரிவர்த்தனை பகுப்பாய்வு மையம் மற்றும் அமெரிக்காவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ ஆகியவை இணைந்து செயல்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக