புதன், 9 செப்டம்பர், 2026

அமெரிக்காவின் பிடியிலிருந்து உலக நாடுகள் மெல்ல நழுவுகின்றன

இன்றைய உலக நிதிச் சந்தையில் அரசியல் தலைவர்களின் வார்த்தைகளை விட, மத்திய வங்கிகளின் ரகசிய நகர்வுகள்தான் உண்மையான பொருளாதார உண்மைகளை நமக்கு உரக்கச் சொல்கின்றன. 

 அமெரிக்காவின் பிடியிலிருந்து உலக நாடுகள் எப்படி மெல்ல நழுவுகின்றன என்பதை விளக்கும் ஒரு விரிவான பார்வை இது. சமீபத்தில் நெதர்லாந்து நாடு அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த தனது தங்கத்தை மிக அமைதியாக வெளியேற்றி லண்டனுக்கு மாற்றியுள்ளது. சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள 86 டன் தங்கம் எந்தவித ஆரவாரமும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பல தசாப்தங்களாக, உலக நாடுகள் தங்கள் நாட்டு தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் Federal Reserve வங்கியிலும் கனடாவிலும் பாதுகாப்பாக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக (குறிப்பாக உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அமெரிக்காவால் முடக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு) உலக நாடுகளின் பார்வை முற்றிலும் மாறியது. 

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளின் நிதிச் சொத்துக்களை ஒரே கிளிக்கில் முடக்க முடியும் (Sanctions and Asset Freezes) என்ற நிலை உருவாக்கப்பட்டபோது, அமெரிக்காவின் federal reserve ல் இருக்கும் தங்களுடைய தங்கம் கூட இனி முற்றிலும் பாதுகாப்பானதல்ல” என்ற சந்தேகம் ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்தது. 

நெதர்லாந்து 86 டன் தங்கத்தையும், பிரான்ஸ் 129 டன் தங்கத்தையும் நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றமை இதற்கு சிறந்த சான்றாகும். அதிகாரப்பூர்வமாக இது "தளவாடப் பாதுகாப்பு" (Crisis preparedness & Logistics) என்று கூறப்பட்டாலும், உண்மை என்னவென்றால், அமெரிக்க அதிகார வரம்பிலிருந்து தங்கள் நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தை வெளியே கொண்டு செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

 டச்சு மத்திய வங்கியான DNB (De Nederlandsche Bank) கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஒரு பெரிய உண்மையை ஒப்புக்கொண்டது. இந்த ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள், அது 86 மெட்ரிக் Ton தங்கத்தை இடம் மாற்றியுள்ளது. மதிப்பீட்டின்படி, 86 டன் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 பில்லியன் டாலர்கள் என்பதே அந்த செய்தி. 

இதில் வியப்பு என்னவென்றால், சுமார் 21 Ton தங்கம் விமானம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து Zeist என்ற சிறிய நகருக்கு அருகில் உள்ள இரகசிய இராணுவ தளத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது. 

மீதமுள்ள 65 டன் தங்கம் நியூயார்க்கிலேயே விற்கப்பட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு லண்டனில் புதிய தங்கம் வாங்கப்பட்டது. இதை ஏன் இவர்கள் இவ்வாறு இரகசியமாக செய்யவேண்டும் ? டச்சு மத்திய வங்கியின் ஆளுநர் Olaf Sleijpen இதற்கு விளக்கம் அளித்தார். அவருன் கூற்றுப்படி, லண்டனில் உள்ள தங்கம்தான் உலகிலேயே மிக எளிதாக வணிகம் செய்யக்கூடியது (Most easily tradable gold).

ஒருவேளை அவசர காலம் (Crisis) ஏற்பட்டால், அதை உடனடியாக விற்றுப் பயன்படுத்த முடியும் என்றார். நெதர்லாந்து மட்டுமா இந்தச் செயலில் ஈடுபட்டது என்றால் அதுதான் இல்லை. பிரான்சின் மத்திய வங்கியும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு காரியத்தை மிக அமைதியாகச் செய்துள்ளது. 2025 ஜூலைக்கும் 2026 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்ஸ் தனது 129 டன் தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றது. 

இது பிரான்சின் மொத்த தங்க இருப்பில் 5 சதவீதமாகும். ஐரோப்பாவின் மிகவும் எச்சரிக்கையான இந்த இரண்டு நிதி நிறுவனங்களும் அடுத்தடுத்து ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது வெறும் சாதாரண நிகழ்வு அல்ல. இதுவொரு தெளிவான பாரிய உலக பொருளாதார மாற்றம் தொடர்பான Signal ஆகும். ஏன் திடீரென இவ்விரு நாடுகளும் தங்கள் தங்கங்களை மீள பெற்றுக் கொள்கின்றன என நீங்கள் நினைக்கலாம்.

சமீப கால உலக அரசியல் நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன: உக்ரைன் போரைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பல நூறு பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுச் சொத்துக்களை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரே நொடியில் முடக்கின, 

எந்தவொரு நாடாவது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அமெரிக்காவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் சொத்துக்களும் தங்கமும் பாதுகாப்பாக இருக்காது என்ற கடுமையான அச்சம் ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்துள்ளது.

நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் பாரம்பரியமாக அமெரிக்காவுடன் நட்பில் இருந்தாலும், "எங்கள் நாட்டின் இறுதிப் பாதுகாப்பு அரணான தங்கத்தை மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் வைப்பது ஆபத்தானது" என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாகவே இந்த மீட்கும் படலத்தை ரகசியமாக அரங்கேற்றின. 

உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மையும், போர்ச் சூழல்களும் அதிகரித்து வரும் தற்காலத்தில், தங்கத்தைத் தங்களுக்கு மிக அருகில் அல்லது எளிதில் கையாளக் கூடிய லண்டன் போன்ற பாதுகாப்பான மையங்களுக்கு மாற்ற வேண்டிய அவசியத்தை இந்தச் சூழல் ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடுகள் பகிரங்கமாக அமெரிக்க டாலரை எதிர்க்காவிட்டாலும், அமெரிக்க டாலர் மற்றும் நியூயார்க் நிதிச் சந்தையை மட்டும் முழுமையாக நம்பியிருக்கும் நிலையை மாற்ற விரும்புகின்றன. 

தங்கள் நாட்டின் சொத்துக்களை அமெரிக்காவின் பிடியிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றுவதன் மூலம், தங்களது பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கின்றன. ஐரோப்பாவின் மிகவும் பழமைவாத மற்றும் கவனமாகச் செயல்படக்கூடிய இரண்டு மத்திய வங்கிகள் (நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ்) ஒரே காலகட்டத்தில் இந்த முடிவை எடுப்பது என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. 

இது அமெரிக்க டாலர் மையப்படுத்தப்பட்ட உலக அமைப்பின் மீதான மறைமுக எதிர்ப்பும், தங்கத்தை மையமாகக் கொண்ட பாதுகாப்பான மாற்று ஏற்பாட்டை நோக்கிய நகர்வும் ஆகும். சுருக்கமாக சொன்னால் உலகம் Dedollarisation நோக்கியே செல்கிறது. Dedollarisation என்பது ஒரே இரவில் அமெரிக்க டாலரைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு கரன்சியை ஏற்பது அல்ல.

மாறாக, உலக நாடுகள் டாலர் மீதான தங்களது பல தசாப்த கால குருட்டு நம்பிக்கையைக் கைவிட்டு, எந்தவொரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ‘தங்கத்தை’ (Gold) தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணாக மாற்றுவதே உண்மையான Dedollarisation ஆகும். நெதர்லாந்து (86 டன்) மற்றும் பிரான்ஸ் (129 டன்) நாடுகள் தங்களுடைய கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றது இந்த Dedollarisation துரிதப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகிறது. 

இந்த ஐரோப்பிய நாடுகள் தற்போது வெளியேற்றக் காரணம் வெறும் தற்செயல் அல்ல, இது டாலர் சார்ந்த அமைப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வியூகம் . இதன் மூலம், அமெரிக்காவின் நேரடி நிதி அதிகாரத்திலிருந்து தங்கள் நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தை அவர்கள் விடுவித்துக் கொண்டுள்ளனர். 

இது டாலர் கட்டமைப்பின் மீதான நேரடியான அவநம்பிக்கையை தெளிவாக காட்டுகிறது. ஐரோப்பாவின் மிகவும் எச்சரிக்கையான இந்த இரண்டு மத்திய வங்கிகள் ஒரே காலகட்டத்தில் இந்த முடிவை எடுப்பது, "அமெரிக்க டாலர் மையப்படுத்தப்பட்ட தற்போதைய நிதி அமைப்பு இனி பாதுகாப்பானதல்ல" என்பதை உலகிற்குச் சொல்லாமல் சொல்லும் Signalலாகவே பார்க்க வேண்டும்.

 மத்திய வங்கிகள் டாலரை விடுத்து தங்கத்தைக் குவிப்பதன் மூலமும், அதனைச் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலமும் என்ன உணர்த்துகின்றனவெனில்…

தங்கம் என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசாங்கத்திற்கும் கட்டுப்படாத, எவராலும் முடக்க முடியாத (Sanctions மூலம் முடக்கம் செய்ய முடியாத) ஒரே சொத்து என்பதையும் உலகம் இனி ஒற்றை டாலர் நாணயத்தின் கீழ் இயங்காது என்றும் பலமுனை நிதி உலகத்தின் (Multi-polar Financial System) படியே இயங்கும் என்பதையும் இந்த இரு நாட்டு மத்திய வங்கிகளின் இந்தப் பயணம் திட்டவட்டமாக நிரூபிக்கிறது. 

அமெரிக்க அரசியல்வாதிகள் டாலரின் பலத்தைப் பற்றியும் பேசலாம் ஆனால் மத்திய வங்கிகளின் ‘தங்கம் மீளப்பெறுதல்கள்” உலகப் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக அதலபாதாளத்திற்கு செல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. 

டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அமைதியான De-Dollarisation புரட்சி, உலக நிதி வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks