செவ்வாய், 8 செப்டம்பர், 2026

யாழ் குளங்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்குடன், குளங்களின் நீர்ப்பிடிப்பு மற்றும் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் துரித தூர்வாரும் நடவடிக்கைகள் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டு முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை ‘எல் நினோ’ (El Niño) காலநிலைத் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், வடகீழ் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே இப்பணிகளை நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 

கந்தரோடைக் குளம், அராலி பாலத்திற்கு அண்மையிலுள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்கும் விசேட செயற்றிட்டம் மற்றும் அல்லைப்பிட்டி – கற்குளம் ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாகத் தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

 குறித்த நீர்நிலைகளில் படிந்துள்ள சேறு, வண்டல் மற்றும் கழிவுகளை அகற்றி, குளங்களின் நீர்த்தேக்கக் கொள்ளளவை அதிகரிப்பதும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைப்பதும் இதன் பிரதான இலக்காகும். 

கிடைக்கக்கூடிய நன்னீரை வீணாகக் கடலில் கலக்க விடாமல் நிலத்தடியில் செறிவூட்டி, விவசாயம், நன்னீர் மீன்பிடி மற்றும் பொதுமக்களின் நாளாந்த குடிநீர் தேவைகளுக்கு உகந்த வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குரிய களப்பணிகள் இடம்பெறுகின்றன. 

 அந்தந்தப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் நேரடிக் கண்காணிப்பு, இயந்திர உதவிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இப்பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks