புதன், 26 ஆகஸ்ட், 2026

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி

தொண்டைமானாறு அருள்மிகு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தேர்த் திருவிழா மற்றும் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியில் பக்தர்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் தரித்து நிற்கவும் இலங்கை இராணுவத்தினர் விசேட அனுமதி வழங்கியுள்ளனர். 

 ஆலய மகோற்சவத்தின் சிகர நிகழ்வுகளான தேர்த் திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமையும் (2026 ஓகஸ்ட் 27), தீர்த்தத் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் (2026 ஓகஸ்ட் 28) நடைபெறவுள்ள நிலையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியானது கடந்த வருடம் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் மாத்திரம் திறக்கப்பட்டிருந்த போதிலும், மக்கள் நடந்து செல்வதற்கோ அல்லது வாகனங்களைத் தரித்து நிறுத்துவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks