சர்வதேச கடல்சார் போக்குவரத்துக்கும் வணிகக் கப்பல்களுக்கும் உடனடி அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் இந்த 4 தாக்குதல் ட்ரோன்களையும் அமெரிக்க வான்படை விமானங்கள் நடுவானில் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (CENTCOM) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்டன. ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள கோருக் (Goruk) பகுதி மற்றும் கெஷ்ம் தீவில் (Qeshm Island) அமைந்திருந்த ஈரானின் கடலோரக் கண்காணிப்பு ரேடார் தளங்களை அமெரிக்க ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்துள்ளது.
உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில், கடந்த பெப்ரவரி மாதம் முதல் நிலவி வரும் போர்ச் சூழலை இந்த அண்மைக்காலத் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக