மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்றது. சமய அதிகாரம் கொண்ட சிலரால் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜுவைரியா முகைதீன், “அனுராதபுரத்தில் 13 வயது சிறுமி மீதான பாலியல் வல்லுறவு சம்பவம் முழு நாட்டையும் உலுக்கும் அளவுக்கு வேதனையானது. இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி மற்றும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக