இந்த ஒப்பந்தம் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை விரிவுபடுத்த அனுமதிக்கும் அதே வேளையில், இது தங்கள் இறையாண்மையையும் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாப்பதாக டென்மார்க்கும் கிரீன்லாந்தும் கூறுகின்றன.
தனது இரண்டாவது பதவிக்காலத்தின் பெரும்பகுதியில், ஓரளவு தன்னாட்சி பெற்ற டென்மார்க் பிரதேசத்தை பலவந்தமாக இணைத்துக்கொள்வதாக அச்சுறுத்தி வந்த டொனால்ட் டிரம்ப், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்களுடன் அமெரிக்கா ஒரு ஆர்க்டிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
டிரம்ப் "மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் சிறப்பானது" என்று விவரித்த இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, அடுத்த வாரம் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மூன்று அரசாங்கங்களாலும் கையெழுத்திடப்படும் என்று டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர்.
ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், இந்த ஒப்பந்தத்தை ஒரு தனிப்பட்ட வெற்றியாகச் சித்தரித்தார். கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பிற தேவைகள் மீதான நிரந்தரக் கட்டுப்பாட்டை இது அமெரிக்காவிற்கு வழங்குவதாகவும், அமெரிக்காவின் பல்வேறு கவலைகள் அனைத்திற்கும் இது முழுமையான தீர்வு காண்பதாகவும் அவர் கூறினார்.
"கிரீன்லாந்தின் பொருத்தமான பகுதியில் ஒரு பெரிய அளவிலான ராணுவ இருப்பை உருவாக்கும் பணிகளை நாங்கள் உடனடியாகத் தொடங்குவோம்," என்றும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டார். நேட்டோ (NATO) அமைப்பின் வாயிலாக, அந்தத் தீவில் அமெரிக்கா ஏற்கனவே தனது இருப்பைக் கொண்டுள்ளதுடன், அங்குள்ள ராணுவத் தளங்களை விரிவுபடுத்துவதற்கான உரிமையையும் பெற்றுள்ளது.நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் உடனான போர் குடியரசுக் கட்சியினருக்குப் பெரும் அரசியல் சுமையாக மாறிவரும் நிலையில், வாக்காளர்களிடம் எடுத்துக்கூறக்கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கை வெற்றியை இது அதிபருக்கு வழங்குகிறது; பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் அவைகளில் தங்களின் மிகக் குறைந்த அளவிலான பெரும்பான்மையைத் தக்கவைக்க அக்கட்சியினர் போராடி வருகின்றனர்.
நேட்டோ (NATO) அமைப்பில் அங்கம் வகிக்கும் டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தில் அமெரிக்கா நீண்ட காலமாகத் தனது ராணுவ இருப்பைக் கொண்டுள்ளது; மேலும், பனிப்போர் காலத்திலிருந்தே அங்குள்ள பிட்டுஃபிக்கில் (Pituffik) ஒரு ராணுவத் தளத்தையும் அது பராமரித்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, "அமெரிக்காவின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, அமெரிக்காவின் எதிரி நாடுகள் எவராலும் கிரீன்லாந்தில் ராணுவத் தளத்தையோ அல்லது ராணுவ இருப்பையோ கொண்டிருக்கவோ, அல்லது அங்கு முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளைச் செய்யவோ ஒருபோதும் முடியாது" என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு இணையத்தில் வெளியிடப்பட்ட டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கத் தலைவர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோரின் அறிக்கைகள் ஒரு முக்கிய விஷயத்தை வலியுறுத்தின: அதாவது, "கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும்" என்று டிரம்ப் முன்பு தெரிவித்திருந்த விருப்பத்தை இந்த ஒப்பந்தம் பூர்த்தி செய்யவில்லை.
அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அரச அனுசரணையுடன் இடம்பெறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் சுதந்திரமாக செயற்படுகிறார்கள்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி இறையான்மையை பாதுகாத்த முப்படையின் தளபதிகளும், அவர்களின் குடும்பத்தாரும், முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரையும் அரசாங்கம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது.
சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதை அவதானிக்க முடிகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டார்.
தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்துமாறு கோரப் போவதில்லை.
ஆகவே அவர் தற்போது சிறந்த இலங்கையராகவே செயற்படுகிறார் அது எமக்கு பிரச்சினையல்ல“ என்று தெரிவித்தார்.
இன்றைய உலக நிதிச் சந்தையில் அரசியல் தலைவர்களின் வார்த்தைகளை விட, மத்திய வங்கிகளின் ரகசிய நகர்வுகள்தான் உண்மையான பொருளாதார உண்மைகளை நமக்கு உரக்கச் சொல்கின்றன.
அமெரிக்காவின் பிடியிலிருந்து உலக நாடுகள் எப்படி மெல்ல நழுவுகின்றன என்பதை விளக்கும் ஒரு விரிவான பார்வை இது.
சமீபத்தில் நெதர்லாந்து நாடு அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த தனது தங்கத்தை மிக அமைதியாக வெளியேற்றி லண்டனுக்கு மாற்றியுள்ளது.
சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள 86 டன் தங்கம் எந்தவித ஆரவாரமும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக, உலக நாடுகள் தங்கள் நாட்டு தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் Federal Reserve வங்கியிலும் கனடாவிலும் பாதுகாப்பாக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக (குறிப்பாக உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அமெரிக்காவால் முடக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு) உலக நாடுகளின் பார்வை முற்றிலும் மாறியது.
அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளின் நிதிச் சொத்துக்களை ஒரே கிளிக்கில் முடக்க முடியும் (Sanctions and Asset Freezes) என்ற நிலை உருவாக்கப்பட்டபோது, அமெரிக்காவின் federal reserve ல் இருக்கும் தங்களுடைய தங்கம் கூட இனி முற்றிலும் பாதுகாப்பானதல்ல” என்ற சந்தேகம் ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்தது.
நெதர்லாந்து 86 டன் தங்கத்தையும், பிரான்ஸ் 129 டன் தங்கத்தையும் நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றமை இதற்கு சிறந்த சான்றாகும்.
அதிகாரப்பூர்வமாக இது "தளவாடப் பாதுகாப்பு" (Crisis preparedness & Logistics) என்று கூறப்பட்டாலும், உண்மை என்னவென்றால், அமெரிக்க அதிகார வரம்பிலிருந்து தங்கள் நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தை வெளியே கொண்டு செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
டச்சு மத்திய வங்கியான DNB (De Nederlandsche Bank) கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஒரு பெரிய உண்மையை ஒப்புக்கொண்டது.
இந்த ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள், அது 86 மெட்ரிக் Ton தங்கத்தை இடம் மாற்றியுள்ளது.
மதிப்பீட்டின்படி, 86 டன் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 பில்லியன் டாலர்கள் என்பதே அந்த செய்தி.
இதில் வியப்பு என்னவென்றால், சுமார் 21 Ton தங்கம் விமானம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து Zeist என்ற சிறிய நகருக்கு அருகில் உள்ள இரகசிய இராணுவ தளத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது.
மீதமுள்ள 65 டன் தங்கம் நியூயார்க்கிலேயே விற்கப்பட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு லண்டனில் புதிய தங்கம் வாங்கப்பட்டது.
இதை ஏன் இவர்கள் இவ்வாறு இரகசியமாக செய்யவேண்டும் ?
டச்சு மத்திய வங்கியின் ஆளுநர் Olaf Sleijpen இதற்கு விளக்கம் அளித்தார். அவருன் கூற்றுப்படி, லண்டனில் உள்ள தங்கம்தான் உலகிலேயே மிக எளிதாக வணிகம் செய்யக்கூடியது (Most easily tradable gold).
ஒருவேளை அவசர காலம் (Crisis) ஏற்பட்டால், அதை உடனடியாக விற்றுப் பயன்படுத்த முடியும் என்றார்.
நெதர்லாந்து மட்டுமா இந்தச் செயலில் ஈடுபட்டது என்றால் அதுதான் இல்லை.
பிரான்சின் மத்திய வங்கியும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு காரியத்தை மிக அமைதியாகச் செய்துள்ளது.
2025 ஜூலைக்கும் 2026 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்ஸ் தனது 129 டன் தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றது.
இது பிரான்சின் மொத்த தங்க இருப்பில் 5 சதவீதமாகும்.
ஐரோப்பாவின் மிகவும் எச்சரிக்கையான இந்த இரண்டு நிதி நிறுவனங்களும் அடுத்தடுத்து ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது வெறும் சாதாரண நிகழ்வு அல்ல.
இதுவொரு தெளிவான பாரிய உலக பொருளாதார மாற்றம் தொடர்பான Signal ஆகும்.
ஏன் திடீரென இவ்விரு நாடுகளும் தங்கள் தங்கங்களை மீள பெற்றுக் கொள்கின்றன என நீங்கள் நினைக்கலாம்.
சமீப கால உலக அரசியல் நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன:
உக்ரைன் போரைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பல நூறு பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுச் சொத்துக்களை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரே நொடியில் முடக்கின,
எந்தவொரு நாடாவது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அமெரிக்காவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் சொத்துக்களும் தங்கமும் பாதுகாப்பாக இருக்காது என்ற கடுமையான அச்சம் ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்துள்ளது.
நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் பாரம்பரியமாக அமெரிக்காவுடன் நட்பில் இருந்தாலும், "எங்கள் நாட்டின் இறுதிப் பாதுகாப்பு அரணான தங்கத்தை மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் வைப்பது ஆபத்தானது" என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாகவே இந்த மீட்கும் படலத்தை ரகசியமாக அரங்கேற்றின.
உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மையும், போர்ச் சூழல்களும் அதிகரித்து வரும் தற்காலத்தில், தங்கத்தைத் தங்களுக்கு மிக அருகில் அல்லது எளிதில் கையாளக் கூடிய லண்டன் போன்ற பாதுகாப்பான மையங்களுக்கு மாற்ற வேண்டிய அவசியத்தை இந்தச் சூழல் ஏற்படுத்தியது.
ஐரோப்பிய நாடுகள் பகிரங்கமாக அமெரிக்க டாலரை எதிர்க்காவிட்டாலும், அமெரிக்க டாலர் மற்றும் நியூயார்க் நிதிச் சந்தையை மட்டும் முழுமையாக நம்பியிருக்கும் நிலையை மாற்ற விரும்புகின்றன.
தங்கள் நாட்டின் சொத்துக்களை அமெரிக்காவின் பிடியிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றுவதன் மூலம், தங்களது பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கின்றன.
ஐரோப்பாவின் மிகவும் பழமைவாத மற்றும் கவனமாகச் செயல்படக்கூடிய இரண்டு மத்திய வங்கிகள் (நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ்) ஒரே காலகட்டத்தில் இந்த முடிவை எடுப்பது என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல.
இது அமெரிக்க டாலர் மையப்படுத்தப்பட்ட உலக அமைப்பின் மீதான மறைமுக எதிர்ப்பும், தங்கத்தை மையமாகக் கொண்ட பாதுகாப்பான மாற்று ஏற்பாட்டை நோக்கிய நகர்வும் ஆகும்.
சுருக்கமாக சொன்னால் உலகம் Dedollarisation நோக்கியே செல்கிறது.
Dedollarisation என்பது ஒரே இரவில் அமெரிக்க டாலரைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு கரன்சியை ஏற்பது அல்ல.
மாறாக, உலக நாடுகள் டாலர் மீதான தங்களது பல தசாப்த கால குருட்டு நம்பிக்கையைக் கைவிட்டு, எந்தவொரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ‘தங்கத்தை’ (Gold) தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணாக மாற்றுவதே உண்மையான Dedollarisation ஆகும்.
நெதர்லாந்து (86 டன்) மற்றும் பிரான்ஸ் (129 டன்) நாடுகள் தங்களுடைய கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றது இந்த Dedollarisation துரிதப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகிறது.
இந்த ஐரோப்பிய நாடுகள் தற்போது வெளியேற்றக் காரணம் வெறும் தற்செயல் அல்ல, இது டாலர் சார்ந்த அமைப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வியூகம் .
இதன் மூலம், அமெரிக்காவின் நேரடி நிதி அதிகாரத்திலிருந்து தங்கள் நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தை அவர்கள் விடுவித்துக் கொண்டுள்ளனர்.
இது டாலர் கட்டமைப்பின் மீதான நேரடியான அவநம்பிக்கையை தெளிவாக காட்டுகிறது.
ஐரோப்பாவின் மிகவும் எச்சரிக்கையான இந்த இரண்டு மத்திய வங்கிகள் ஒரே காலகட்டத்தில் இந்த முடிவை எடுப்பது, "அமெரிக்க டாலர் மையப்படுத்தப்பட்ட தற்போதைய நிதி அமைப்பு இனி பாதுகாப்பானதல்ல" என்பதை உலகிற்குச் சொல்லாமல் சொல்லும் Signalலாகவே பார்க்க வேண்டும்.
மத்திய வங்கிகள் டாலரை விடுத்து தங்கத்தைக் குவிப்பதன் மூலமும், அதனைச் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலமும் என்ன உணர்த்துகின்றனவெனில்…
தங்கம் என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசாங்கத்திற்கும் கட்டுப்படாத, எவராலும் முடக்க முடியாத (Sanctions மூலம் முடக்கம் செய்ய முடியாத) ஒரே சொத்து என்பதையும்
உலகம் இனி ஒற்றை டாலர் நாணயத்தின் கீழ் இயங்காது என்றும் பலமுனை நிதி உலகத்தின் (Multi-polar Financial System) படியே இயங்கும் என்பதையும் இந்த இரு நாட்டு மத்திய வங்கிகளின் இந்தப் பயணம் திட்டவட்டமாக நிரூபிக்கிறது.
அமெரிக்க அரசியல்வாதிகள் டாலரின் பலத்தைப் பற்றியும் பேசலாம் ஆனால் மத்திய வங்கிகளின் ‘தங்கம் மீளப்பெறுதல்கள்” உலகப் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக அதலபாதாளத்திற்கு செல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அமைதியான De-Dollarisation புரட்சி, உலக நிதி வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் கூறுகிறது.
எனினும் குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.