இவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த 900 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மற்றைய நபர் தணமல்வில பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த 350 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஜீப் வண்டியை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வத்தளைப் பகுதியைச் சேர்ந்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
முடக்கப்பட்ட சொத்துக்கள் விபரம்
ஹுனுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 7 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு மாடி வீடும் (சுமார்: ரூ. 400 இலட்சம்)
ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு வீடுகளும் (சுமார்: ரூ. 300 இலட்சம்)
ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 5 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 50 இலட்சம்)
காந்தி மாவத்தை, ஹுனுபிட்டிய முகவரியில் அமைந்துள்ள 3 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 70 இலட்சம்)
மாலபேயில் அதிவேக நெடுஞ்சாலைப் பாலத்திற்கு அருகில் இருந்து T56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 145 தோட்டாக்கள் அடங்கிய தொகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தக வலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தத் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக வர்த்தகர் நிமல் பெரேரா பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகநபர்களுக்கு எதிராக தாமதமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகலமான உடற்பகுதியைக் கொண்ட 16 விமானங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த விடயங்களைத் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்தின் கீழும் தனியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேகநபர் ஒருவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போதைய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆணைக்குழுவும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோ இலஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் முதலில் வைப்பிலிடப்பட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்தக் கணக்கிலிருந்து, வர்த்தகர் நிமல் பெரேரா தலைவராக இருந்த சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குழப்பங்களால் சூழப்பட்டு, எதிர்பாராததை எதிர்பார்க்கப் பழகிக்கொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தில் கூட, செங்கடல் கடற்கரையோரமாக ஏமனின் ஹூதிகளின் மின்னல் வேக முன்னேற்றம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வறுமையும் இடம்பெயர்வும் சர்வ சாதாரணமாகிவிட்ட, பாதி மக்கள் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பி ஓட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் வெளியாட்கள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர், ஏனெனில் சில நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கைப்பற்றியும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைப் பிடித்தும், ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இப்போது பாப் அல்-மண்டாப் ஜலசந்தியைக் கட்டுப்படுத்துகின்றனர் – இது ஹோர்முஸ் ஜலசந்திக்குப் பிறகு பிராந்தியத்தின் மற்றொரு முக்கிய எரிசக்தித் தடைப் புள்ளியாகும்.
ஈரான் போர், சவூதி அரேபியாவை அதன் கிழக்கு-மேற்கு குழாய் வழியாக செங்கடல் துறைமுகங்களுக்கு எண்ணெயைக் கொண்டு செல்வதை நம்பியிருக்க நிர்பந்தித்தது.
இப்போது, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அந்தக் குழாய்வழியை முடக்கியுள்ளன: ஒரு மதிப்பீட்டின்படி, ஒரு மாத கால இந்த மூடல் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை 120 மில்லியன் பீப்பாய்கள் வரை குறைக்கக்கூடும். பாப் அல்-மண்டாப் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தம் இன்னும் நீண்ட காலம் நீடிக்கக்கூடும்.
எண்ணெயை வடக்கே கொண்டு செல்வது ஆசிய சந்தைகளுக்கு மிகவும் மெதுவான மற்றும் அதிக செலவு பிடிக்கும் ஒரு வழியாகும்.
மேலும், எண்ணெய் வசதிகளைக் குறிவைக்கும் ஹூதிகளின் தாக்குதல்களையும் இது தடுக்காது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பெயரளவுக்கு, தனது சொந்த கருவூலத்திற்கும் யேமன் குடிமக்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தி, பொறுப்பற்ற முறையில் முன்னின்று நடத்திய ஹூதிகளுடனான போரிலிருந்து சவூதி அரேபியா மிகுந்த வேதனையுடன் தன்னை விடுவித்துக் கொண்டது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முதல் முறையாக, ஜூலை மாதம் ஈரானிலிருந்து ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவுக்கு வந்த விமானத்திற்கு தனது பதிலடியை சரிசெய்து, 2022-ஆம் ஆண்டு போர்நிறுத்தத்தைக் காப்பாற்ற முடியும் என்று அது நம்பியது.
ஆனால், சனா விமான நிலையத்தின் மீது குண்டு வீசியது, ரியாத்தின் மீது பழி சுமத்தியவாறே பதற்றத்தை அதிகரிக்க ஹூதிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது.ஹூதிகள் வெறும் தெஹ்ரானின் (ஈரானின்) கைப்பாவைகள் மட்டுமல்ல; டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்த சட்டவிரோதப் போரின் காரணமாக, இரு தரப்பினரின் நலன்களும் இப்போது மேலும் ஒன்றிணைந்துள்ளன. அவர்களுக்கு ஈரானின் ஆதரவு தேவைப்படுகிறது.
அதேவேளையில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் நெருக்கடியானது, கடற்கரையோரங்களில் மூலோபாய ஆதாயங்கள் மூலம் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தவும், ஒருவேளை புதிய வருவாய் வழியை உருவாக்கவும் அவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை அளித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் தெற்குப் பகுதி பிரிவினைவாதிகள் உள்ளிட்ட அவர்களுக்கு எதிரான சக்திகள், முன்னெப்போதையும் விட அதிக பிளவுகளுடன் காணப்படுகின்றன.
ஒருகாலத்தில் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சவுதி அரேபியாவுடன் மோதலில் ஈடுபட்ட ஐக்கிய அரபு அமீரகம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஹூதிகளைப் பின்வாங்கச் செய்வதற்கு சவுதியின் தாக்குதல்கள் மட்டும் போதுமானதாக இருக்காது. ஆனால், உதவிக்கான கோரிக்கைகளை டிரம்ப் நிராகரித்துவிட்டார்.
தாங்கள் சவுதிகளை மட்டுமே குறிவைப்பதாகக் கூறுமளவுக்கு ஹூதிகள் தந்திரமாகச் செயல்படுகிறார்கள்; இருப்பினும், எதிர்காலத்தில் தங்கள் செல்வாக்கை இன்னும் பரந்த அளவில் பயன்படுத்த முடியும் என்ற உண்மையையே இச்செய்தி வலுப்படுத்துகிறது.
மேலும், அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ள ஜிபூட்டிக்கு அவர்கள் முன்னெப்போதையும் விட மிக அருகில் உள்ளனர்.
சவுதி அரேபியா இப்போது ஒரு இக்கட்டான தேர்வை எதிர்கொள்கிறது.
ஒன்று, அதிக துணிச்சலுடன் தீவிரமான கோரிக்கைகளை முன்வைக்கும் எதிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது; அல்லது, இம்முறை போதிய ஆதரவு இல்லாத நிலையில், முன்பு தாங்களே வருந்திய வகையிலான முழு அளவிலான போருக்கு மீண்டும் திரும்புவது. ஆகஸ்ட் மாதம் மூன்று நாடுகளும் கையெழுத்திட்ட புதிய 'மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' அடிப்படையில் செயல்பட துருக்கியும் பாகிஸ்தானும் அவசரம் காட்டவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தீவிரமாக களமிறங்கியுள்ளது,
ரஷ்யாவின் எரிபொருளை வாங்கும் நாடுகள் மீது அதிகபட்சமாக 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இறுதி வாக்கெடுப்பு கட்டத்தை எட்டியுள்ளது!
கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்த முதற்கட்ட நடைமுறை வாக்கெடுப்பில், இந்த மசோதா 214 – 211 என்ற மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 16-ஆம் தேதியான இன்று பிரதிநிதிகள் சபையில் இதன் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு ஏற்கனவே அமெரிக்க செனட் சபையில் அசுர ஆதரவு கிடைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 86 – 11 என்ற கணக்கில் செனட் சபை இதற்கு ஒப்புதல் அளித்தது. ரஷ்யாவின் எரிபொருள் வருமானத்தை அடியோடு முடக்குவது, தடைகளை மீறி நடக்கும் வர்த்தகத்தை தடுப்பது மற்றும் ரஷ்யா-ஈரான் மீதான தடைகளை மேலும் தீவிரப்படுத்துவது ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மசோதா விவாதத்திற்கு வந்ததில் இருந்தே, உலக நாடுகளின் பார்வையெல்லாம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது!
டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர் ஸ்டெனி ஹோயர் கொண்டு வந்த திருத்தத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளின் பட்டியல் நேரடியாக சேர்க்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இந்தியா, சீனா, துருக்கி, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, யு.ஏ.இ., சிங்கப்பூர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டு, அவற்றின் மீது 100% வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டது.
ஆனால், அமெரிக்கா உடனடியாக இந்தியா மீது 100% வரியை விதித்துவிடவில்லை! ஹோயர் கொண்டு வந்த அந்த குறிப்பிட்ட திருத்தத்தை ‘ஹவுஸ் ரூல்ஸ் கமிட்டி’ 3-7 என்ற கணக்கில் நிராகரித்து விட்டது.
எனவே, இந்தியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்ட அந்த திருத்தம் தற்போதைய சட்ட வரைவில் இடம் பெறவில்லை.
செனட் சபை அங்கீகரித்த அசல் மசோதாவிலேயே, ரஷ்யாவிடம் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் முக்கிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அதிபருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
சீதுவை நகர் பகுதியில் உள்ள விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு நபர் ஒரு கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் போயகனே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவராவார்.
உயிரிழந்த நபர் குறித்த விடுதியின் மேல் மாடியில் தங்கியிருந்த அவ்விடுதியின் ஊழியர் என தெரியவந்துள்ளது.
இவர் மற்றொரு ஊழியருடன் இணைந்து மதுஅருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு முற்றியதில், மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளது.
மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் தற்போது 10 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.