சனி, 19 செப்டம்பர், 2026

BRICS அமைப்பு 21 நாடுகளின் வலிமைமிக்க கூட்டணி!!

வரலாற்றில் எப்போதாவதுதான் உலக ஒழுங்கைத் தலைகீழாக மாற்றக்கூடிய மாபெரும் திருப்பங்கள் நிகழும். அப்படியொரு வரலாற்றுத் தருணத்தில்தான் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஐந்து நாடுகளின் எளிய கூட்டமைப்பாகத் தொடங்கப்பட்ட BRICS அமைப்பு, இன்று உலக வரைபடத்தில் வல்லாதிக்க சக்திகளின் கணக்கைப் புரட்டிப் போடும் ஒரு பிரமாண்டமான பொருளாதாரப் பேரரசாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

தொடக்கத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்த அமைப்பு, தற்போது 11 முழு உறுப்பினர்களையும், 10 பங்குதாரர் நாடுகளையும் கொண்டு 21 நாடுகளின் வலிமைமிக்க கூட்டணியாக உருவெடுத்துள்ளது. 

இதன் முழு உறுப்பினர்கள் யாரெனில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா. இதன் பங்குதாரர் நாடுகள் யாரெனில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம். இந்த 21 நாடுகளின் கூட்டணி, இன்று உலக மக்கள் தொகையில் பாதியளவைக் கொண்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, உலகளாவிய Purchasing Power Parity 40 சதவீத பங்களிப்பையும், உலகளாவிய வர்த்தகத்தில் நான்கில் ஒரு பகுதியையும் தன்வசப்படுத்தி நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் மேற்குலக நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து, அதன் பொருளாதாரத்தை முடக்க முயன்றபோது, அவை ஒரு புதிய உலகப் போருக்கான விதையைத் தாங்களே அறியாமல் விதைத்தன.

ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி முடக்க முயன்ற அமெரிக்காவின் திட்டங்கள் தறிக்கெட்டுப் போயின. ரஷ்யா துவண்டுவிடவில்லை; மாறாக, மாற்றுப் பாதைகளைத் தேடியது. BRICS அமைப்பு மூலமாக ரஷ்யாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் புதிய கதவுகள் திறக்கப்பட்டன. 

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தாண்டி, ரஷ்யா ஈட்டிய இந்த வெற்றியானது உலக நாடுகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்தக் கூட்டணியின் மிக முக்கிய ஆயுதம் டாலர் ஒழிப்பு (De-dollarization) ஆகும். இனி இந்த 21 நாடுகளும் அமெரிக்க டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கிடையேயான வர்த்தகத்தை சீன யுவான் (Yuan) அல்லது தங்களது சொந்த உள்ளூர் நாணயங்களிலேயே மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. 

தசாப்தங்களாக உலகப் பொருளாதாரத்தை ஒடுக்கி வந்த அமெரிக்க டாலரின் ஏகபோக அதிகாரம் இதன் மூலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா பயன்படுத்தி வந்த பொருளாதாரக் கயிறு அறுபட்டு வருகிறது. 

BRICS அமைப்பு இப்போது வெறும் நாடுகளின் கூட்டமைப்பு அல்ல,அது உலகப் பொருளாதாரத்தின் புதிய மையப்புள்ளி. இந்த மகத்தான எழுச்சி தொடர்ந்தால், உலக அரங்கில் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும், பொருளாதாரத் திமிர்த்தனமும் காலாவதியாகிவிடும். 

மேற்குலகின் பிடியில் சிக்கித்வித்த உலகப் பொருளாதாரம், இப்போது பலமுனை அதிகார மையமாக (Multi-polar world order) மாறிவருகிறது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பயப்பட இனியும் இவர்கள் தயாரில்லை.

 அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கமும், அதன் ஒடுக்குமுறை அரசியலும் முடிவுக்கு வரும் காலம் உறுதியாக நெருங்கிவிட்டது. BRICS அமைப்பின் இந்த மாபெரும் எழுச்சி மற்றும் உள்ளூர் நாணயங்களிலான வர்த்தகம் ஆகியவை, அமெரிக்கா தனது ஏகபோக சக்தியை இழந்து வருவதற்கான தெளிவான சாட்சிகளாகும். 

 இனி உலகப் பொருளாதாரம் ஒருசில நாடுகளின் பிடியில் இருக்காது,மாறாக, சமமான பலமுனை கொண்ட (Multi-polar) ஒரு புதிய உலக ஒழுங்கு அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றும். 

 அமெரிக்காவின் மிரட்டல்களும் பொருளாதார ஏகாதிபத்தியமும் முடிவுக்கு வரும் இந்த வரலாற்றுத் திருப்பம், உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையவிருக்கிறது. இந்த மாற்றத்தின் தாக்கம் வரவிருக்கும் காலங்களில் உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் முற்றிலும் மாற்றி எழுதும் என்பதில் ஐயமில்லை.
முகிந்தன் துரைராஜசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks