தன்னாதிக்கம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர் (Head of State) என்ற ரீதியில் தனக்கு சர்வதேச சட்டங்களின்படி குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையான விலக்குரிமை (Immunity) உள்ளதாக அவர் தனது மனுவில் வாதிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 3-ஆம் திகதி காரகாஸ் நகரில் வைத்து மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது புரூக்ளின் கூட்டாட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரோவின் சட்டத்தரணி பாரி போலாக் (Barry Pollack), மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் (Alvin Hellerstein) சமர்ப்பித்த மனுவில், “நூற்றாண்டுகளாக வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு உள்ள முழுமையான பாதுகாப்பை மீறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
2018 மற்றும் 2024 வெனிசுலா தேர்தல்கள் முறைகேடானவை என்று கூறி, 2019-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகம் மதுரோவை அந்நாட்டின் முறையான ஜனாதிபதியாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது.
இந்த மனு மீது அமெரிக்க அரசுத் தரப்பு எதிர்வரும் ஒக்டோபர் 2-ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான விசாரணை நவம்பர் 17-ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிராகரிக்கப்பட்டால், மதுரோ மீதான நீதிமன்ற விசாரணை 2027 ஜூன் 1-ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக