வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களை காவல்துறையினர் பரிசோதித்தபோது, குறித்த வாகனங்களுக்கான மணல் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தில் காவல்நிலைய உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுக்கும் நோக்கில் இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக