சனி, 29 ஆகஸ்ட், 2026

யாழ்-தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது தாக்குதல்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த போதகர் அன்டனி செபஸ்டியன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரின் ஏற்பாட்டில், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஒன்றுகூடல் மற்றும் பயிற்சி நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்தன. 

அதன் இறுதி நாளான நேற்று, பேராயர் பேத்மதயாளன் தலைமையில் போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் போதகர்களின் ஓய்வூதியம், எதிர்காலத் திட்டங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks