யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது ஆண்கள் 58 பேர், பெண்கள் 44 பேர் மற்றும் சிறுவர்கள் 55 பேர் என மொத்தம் 157 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது பார்வையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக திருவிழாவில் கலந்து கொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்குமாறும், கண்களை தேய்க்காமல், சுயமாக கண் மருந்துகளை பயன்படுத்தாமல் மருத்துவ ஆலோசனையை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார், சுகாதார அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள், அதிகளவிலான பட்டாசுகள், வாணவேடிக்கைகள் மற்றும் தேவையற்ற ஒலி பயன்பாடுகளை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக