கடலூர் மாவட்டம் முழுவது விவசாயிகள் பயிர்வித்த நெல் மூட்டைகளை கொள்ளமுதல் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 337 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வரக்கூடிய நிலையில் தார்பாய்கள் மூலம் நெல் மூட்டைகளை மூடி இருந்தாலும் அவை நனைந்து சேதமடைவதாக விவசாயிகள் குற்றச்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நகரப்பாடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் சுமார் 13000 நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் இதில் சுமார் 1000-க்கு மேற்பட்ட நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்து பாதுகாப்பற்ற முறையில் குளத்தின் அருகே அடுக்கி வைத்துள்ளனர்.
கொள்முதல் நிலையம் அருகே இருந்த குளத்தில் ஏற்பட்ட மண் சார்வு காரணமாக அதிக அளவிலான நெல் மூட்டைகள் குளத்தில் விழுந்துள்ளன. குளத்தில் விழுந்த மூட்டைகளை விவசாயிகளே மேலே தூக்கி வைக்கின்றனர். உரிய பாதுகாப்பு வசதிகள் இன்மை மற்றும் தாமதமான கொள்முதல் முறையே இதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல் மூட்டைகள் அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மழையில் நனைந்து, குளத்தில் விழுந்தும் நெல் மூட்டைகள் சேதமடைவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே உடனடியாக தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக