வியாழன், 13 ஆகஸ்ட், 2026
யாழ். ஆனைக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள்
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது இன்று (13.08.2026) மற்றும் நாளை (14.08.2026) ஆகிய இருதினங்கள் இடம்பெறவுள்ளது.
இக் கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பையும் நேரில் கண்டுகொள்ள முடிகிறது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள் பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ். பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன்.
மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல் சின்னங்களை பார்வையிட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக