இந்த நிலையில் டெல்லியில் இருந்து மதுரைக்கு ராணுவ பாதுகாப்புடன் விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் முதலாவது ஹெலிகாப்டர் வந்து இறங்கியுள்ளது.
அஞ்சல்துறை சார்பில் வினாத்தாள் கொண்டுவர நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது. இந்த வினாத்தாள் பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கக்கூடிய லாக்கரில் வைக்கப்படவுள்ளது. மேலும் மற்றொரு ஹெலிகாப்டர் வர இருப்பதாக கூறப்படுகிறது.
அதில் வரக்கூடிய வினாத்தாள்கள் கனரா வங்கியின் லாக்கரில் வைக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 13,000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் மறுதேர்வை எழுதுகின்றனர். இந்த வினாத்தாள்கள் ஜூன் 21ஆம் தேதி அன்று தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக