திங்கள், 1 ஜூன், 2026

கண்டியில் மற்றுமொரு சிறுமிக்கு நேர்ந்த கதி!!

கண்டியில் சிறுமி ஒருவரைத் தகாத முறைக்கு உட்படுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 




இந்தச் சம்பவத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பௌத்த பிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியினது தந்தையின் சகோதரர் எனக் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பிக்கு 25 வயதுடையவர் எனவும் பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றியவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த்க் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks