திங்கள், 14 செப்டம்பர், 2026

உக்ரைனில் உள்ள ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

போரிஸ் ஜான்சன் மற்றும் ஐரோப்பிய உயர்மட்ட அதிகாரிகள் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு, உக்ரைனில் உள்ள ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.உக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகே, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஐரோப்பியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடந்து சென்ற சிறிது நேரத்திலேயே, ஒரு ரயில் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. யஹோடினில் (Yahodyn) நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ரயிலின் எஞ்சின் சேதமடைந்தது; இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

 கீவ் நகரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பும் வழியில், ஜான்சன் மற்றும் இங்கிலாந்தின் ஜொனாதன் பவல் உள்ளிட்ட ஐரோப்பிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இதே ரயில் பாதையில் வேறொரு ரயிலில் பயணித்திருந்தனர்.

சனி, 12 செப்டம்பர், 2026

லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

லண்டனில் 17-வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீயை சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். 


சனிக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு பாப்லரில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்திற்கு லண்டன் தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டது. "பாப்லரில் உள்ள பிளாக்வால் வேயில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைக்க பத்து தீயணைப்பு வாகனங்களும் சுமார் 70 தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்," என்று அந்தப் படை கூறியது. 

பிளாக்வால் வேயில் உள்ள 22 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 17-வது மாடியில் உள்ள சொத்தின் பாதி சேதமடைந்தது. காலை 6.41 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

 "படையின் 999 கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிகாலை 04.35 மணிக்கு வரவழைக்கப்பட்டு, பாப்லர், வைட்சேப்பல், பிளைஸ்டோ, ஸ்ட்ராட்ஃபோர்ட், ஷாட்வெல், ஈஸ்ட் ஹாம், ஈஸ்ட் கிரீன்விச், பெத்னல் கிரீன் மற்றும் கிரீன்விச் தீயணைப்பு நிலையங்களிலிருந்து குழுக்கள் வரவழைக்கப்பட்டன."

ஞானசார தேரர் தலைமறைவு

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தறைமறைவாகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தியா ஏக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 2018 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவர் மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்றின் இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அவர் விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதுவரை காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அவரைக் கைது செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கடலின் மோச்சா துறைமுகம் ஹவுதி வசம்

செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நடவடிக்கையால் செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, சர்வதேச சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு இந்தச் சம்பவம் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாகப் பலவீனமடைந்தன.

இதன் பின்னணியில், மத்திய கிழக்கில் தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஈரான் தற்போது ஏமனின் ஹவுதி அமைப்பையும் ஈராக் ஆயுதக் குழுக்களையும் அதிகமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மோச்சா துறைமுகம், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் பல்வேறு சரக்குகள் கொண்டு செல்லப்படும் பாப் அல்-மந்தெப் கடல் பாதைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த முக்கியமான கடல் வழித்தடத்துக்கு அருகிலுள்ள துறைமுகத்தை ஹவுதிகள் கைப்பற்றியிருப்பதால், செங்கடலில் பயணிக்கும் சர்வதேச சரக்குக் கப்பல்களை அவர்கள் எளிதில் குறிவைக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

இதனால், கப்பல் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்து தொடர்பாக புதிய அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில், ஈராக் ஆயுதக் குழுக்களும் ஹவுதிகளும் இணைந்து செயல்பட்டதாக சவுதி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. 

எனினும், ஹவுதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவர்கள் சுயமாகவே செயல்பட்டு வருகிறார்கள் என்றும் ஈரான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மோதலால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஏஐ மூலம் பேரழிவு முயற்சி

ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்த சீனா ரஷ்யா ஈரான் முயற்சி செய்தது அம்பலம் ஆகி உள்ளது. ஆந்த்ரோபிக் என்ற அமெரிக்க ஏஐ நிறுவனம் உருவாக்கிய ‘கிளாட்’ என்ற செயற்கை நுண்ணறிவுச் செயலியை சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சித்துள்ளன. 

உளவு பார்ப்பதற்கும், ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பதற்கான தகவல்களைப் பெறுவதற்கும் ஏஐ-ஐப் பயன்படுத்தியுள்ளனர். அறிக்கையின் பின்னணி: இதை ஆந்த்ரோபிக் நிறுவனம் கண்டறிந்து, தனது அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து எச்சரித்துள்ளது. 

சுருக்கமாகச் சொன்னால், பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் ஏஐ தொழில்நுட்பத்தை இந்த நாடுகள் தவறாகப் பயன்படுத்தியிருப்பதை ஆந்த்ரோபிக் நிறுவனம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிக ஆற்றலைப்பெற்று வரும் வேளையில், அதன் முறைகேடான பயன்பாட்டின் ஆபத்தும் தீவிரமடைந்து வருகிறது. 

பிரபல ஏஐ நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு அறிக்கையில், தனது ‘கிளாட்’ மாதிரியை பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் உயிரியல் ஆயுத ஆராய்ச்சி, தீவிர கண்காணிப்பு, உளவு வேலை, சைபர் தாக்குதல், ஆயுத உருவாக்கம் மற்றும் போலி பிரச்சாரங்களுக்காக பயன்படுத்த முயன்ற பல சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளது. 

2025 டிசம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்ட பல முறைகேடு சம்பவங்களை இந்த அறிக்கை விரிவாக விளக்குகிறது. அரசு ஆதரவு பெற்ற குழுக்கள், நிதி ஆதாயத்திற்காக சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், பிரச்சார அமைப்புகள், ஸ்பைவேர் விற்பனையாளர்கள் மற்றும் அரசியல் நோக்கங்களைக் கொண்ட அமைப்புகள் இந்த முறைகேடு முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாக ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது. கிளாட் ஹைக்கூ சொனெட் மற்றும் ஓபஸ் ஆகிய மாதிரிகள் இந்தச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 இவை வழக்கமான முறைகேடு சம்பவங்கள் அல்ல என்றும், இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் புதிய வடிவிலான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. அபாயகரமான உயிரியல் ஆராய்ச்சிகள்: ஆந்த்ரோபிக் அறிக்கையில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த வழக்குகள் உயிரியல் ஆராய்ச்சி தொடர்பானவையாகும். சில விஞ்ஞானிகள் கிளாட்டின் உதவியுடன் அபாயகரமான வைரஸ்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய முயன்றது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதத்தில், விஞ்ஞானி ஒருவர் சிக்குன்குனியா வைரஸ் குறித்த ‘கெய்ன் ஆஃப் பங்க்ஷன்’ (Gain of Function) ஆராய்ச்சிக்கு நிதி உதவி கோரும் விண்ணப்பத்தை தயாரிக்க கிளாட்டின் உதவியை நாடியிருந்தார். 

உயிருள்ள விலங்குகளில் வைரஸை மீண்டும் மீண்டும் தொற்ற வைத்து, அதன் அபாயகரமான குணங்களை அதிகரிக்கும் மரபணு மாற்றங்களை உள்ளடக்கிய ஆராய்ச்சியாக இது இருந்தது என்று ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது. 

இந்த ஆராய்ச்சி ஒரு ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அந்நிறுவனத்திற்கு எழுந்தது. கிளாட்டின் உயிரியல் பாதுகாப்பு அமைப்பு இந்த கோரிக்கையை தடுத்த போதிலும், பயனர்கள் மற்றொரு மூன்றாம் தரப்பு AI சேவையைப் பயன்படுத்தி கட்டுப்பாடுகளை மீற முயன்றதாக அறிக்கை கூறுகிறது.

 மற்றொரு சம்பவத்தில், ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களின் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பது குறித்த நிதி உதவி விண்ணப்பம் கிளாட் ஓபஸ் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டது. 

இதேவேளையில், பறவைக் காய்ச்சல் வைரஸை பாலூட்டிகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் ஆராய்ச்சி செய்து வந்த மற்றொரு ஆராய்ச்சியாளருக்கு, ஆந்த்ரோபிக்கின் திறன் குறைந்த மாதிரியை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர, விஷம் அல்லது நச்சுக்களின் அமைப்பை மாற்றியமைக்கும் இரண்டு அரசு ஆதரவு திட்டங்களையும் தடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

30 நாள் பரிசீலனையில் அரசுடன் தொடர்புடைய சுமார் 35 உயிரியல் ஆராய்ச்சி முயற்சிகள் கண்டறியப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சிவில் ஆராய்ச்சிகளாக இருந்தபோதிலும், சில ‘இரட்டை பயன்பாடு’ தன்மையைக் கொண்டிருந்தன. 

ஏவுகணை மற்றும் ட்ரோன் உருவாக்கத்திற்கும் கிளாட் பயன்பாடு: உயிரியல் ஆயுதங்கள் மட்டுமன்றி, பாரம்பரிய ஆயுதங்களை உருவாக்குவதற்கும் கிளாட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. சீனாவில் மூன்று, ரஷியாவில் இரண்டு மற்றும் ஏமனில் ஒன்று என மொத்தம் பல சம்பவங்களை ஆந்த்ரோபிக் அடையாளம் கண்டுள்ளது. 

ஏமனில் இருந்த ஒரு குழு, கிளாட் குறியீட்டைப் பயன்படுத்தி வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான மென்பொருளை உருவாக்க முயன்றது. வழிகாட்டப்பட்ட ராக்கெட், 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை அடையும் நோக்கத்திலான பலகட்ட பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் கிளைட் வாகனத்தின் மறுவடிவமைப்பு தொடர்பான பணிகளும் நடந்ததாக அறிக்கை கூறுகிறது. 

வழிகாட்டப்பட்ட ராக்கெட்டின் சோதனை ஏவுதல் நடந்தபோதிலும், அது தோல்வியடைந்திருக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷியாவில் ‘ட்ரோன்டாக்’ அல்லது ‘செராஃபிம்’ என்ற முயற்சியுடன் தொடர்புடைய ஒரு நபர், கிளாட் குறியீட்டைப் பயன்படுத்தி தானியங்கி எஃப்.பி.வி கமிகேஸ் ட்ரோன் கூட்டங்களை உருவாக்க முயன்றதாக ஆந்த்ரோபிக் கூறியுள்ளது. மனிதக் கட்டுப்பாடு இன்றி இலக்கைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும் திறன் கொண்ட அமைப்பை உருவாக்க முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது.

சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது. 

 அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை செயற்படுத்தவில்லை என்கின்ற அடிப்படையில் இந்த போராட்டம் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. 

அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Thank You Google

Thank You Google
Thanks