திங்கள், 15 ஜூன், 2026

முதலில் விஜய்- சங்கீதாவை சமரச மையத்துக்கு அனுப்ப உத்தரவு!!

விஜய்- சங்கீதாவை சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் நீதிபதி சுஜாதா உத்தவிட்டார். மேலும் வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகரும், முதல்வருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

சங்கீதா அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சங்கீதா கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி ஆன்லைன் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு, ஏப்ரல் 20ம்தேதி அன்று முதல்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் கட்டாயம் அன்றைய தினம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. 

அப்போது, தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணி இருப்பதால் தன்னால் அன்று ஆஜராக முடியாது என்றும், விசாரணை தேதியை ஒத்திவைக்க கேட்டு மனு அளித்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை ஜூன் 15ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, சங்கீதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருப்பதாலும் அவர் நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை உள்ளதாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கினை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இவர் பிரபலமானவர் என்பதால் இது குடும்ப வழக்கு என்பதாலும் ரகசியமாக நடத்தப்பட வேண்டும் ஊடகங்களுக்கும் பொதுவெளியிலும் தெரியாமல் நீதிமன்றம் இதனை பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டது. 

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடிகர் விஜய் ஆஜராக அனுமதி வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் இருவரும் நீதிபதி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நடிகர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன்பு ஆஜராகி தனது வாதத்தை பேசுவாரா அல்லது பணிச்சுமை காரணமாக வழக்கை ஒத்தி வைக்க வழக்கறிஞர்கள் மூலம் மனு அளிப்பாரா என்பது பரபரப்பு நிலவியது. 

இதனால், முதல்வர் விஜய் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு மேலும் சூடு பிடித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் ஏராளமான ஊடகங்கள் வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு குவிந்திருந்தனர். 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிபதி சுஜாதா முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பு வழக்கறிஞர்களும் நேரில் ஆஜராகி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த வேண்டும் என்றும் வாதிட்டனர். 

இதற்கு நீதிபதி சுஜாதா, ‘வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த சங்கீதா தரப்புக்கு சம்மதமா? என்று கேட்டார். இதற்கு அவர்கள் சரி என்று கூறினர். வீடியோ கான்பரன்ஸ்

செம்மணி 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது. 

இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 341 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார். 

இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதுமாக காணப்பட்டுள்ளன. இன்று புதிய வாரம் ஆரம்பித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் மேற்கொள்ளப்பட்டது.

 அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் !!

தற்போது மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று (15) முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று முதல் 17ஆம் திகதி வரை நகரங்கள், வடிகால் அமைப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன. 

 அதேபோல், 18ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், அவற்றின் சுற்றுப்புற வளாகங்களும் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தம் செய்யும் நாளாக 19ஆம் திகதி பெயரிடப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளன.

"டிரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேலிய அமைச்சர்.

தெஹ்ரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது’ என ஐரோப்பியத் தலைவர்கள் எச்சரித்துள்ள நிலையில், அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்காவும் ஈரானும் தெரிவித்துள்ளன.

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தை விமர்சித்த இஸ்ரேலிய தீவிர வலதுசாரி அமைச்சர், லெபனானில் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், லெபனான் உட்பட மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை திங்களன்று கடுமையாகக் கண்டித்தார். 

மேலும், தனது நாடு அந்த ஒப்பந்தத்தால் கட்டுப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். "டிரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது.நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இல்லை. 

இது எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாது," என்று பென் கிவிர் தனது டெலிகிராம் சேனலில் கூறினார். இந்த ஒப்பந்தம் குறித்து ஒரு இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்த முதல் எதிர்வினை இதுவாகும். "ஹிஸ்புல்லாவை ஒழிப்பதை விடக் குறைவான எதற்கும் நாம் உடன்படக்கூடாது. 

நமது வீரர்கள் கைப்பற்றி, பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றிய ஒரு அங்குல நிலப்பரப்பில் இருந்தும் நாம் பின்வாங்கக்கூடாது," என்றும் அவர் கூறினார்.அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையை மீண்டும் திறக்க ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றப்பட வேண்டும் என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேஃபுல் திங்களன்று கூறினார்.

லக்சம்பர்க்கில் ஐரோப்பிய சகாக்களைச் சந்திப்பதற்கு முன்பு வாடேஃபுல், “ஹோர்முஸ் ஜலசந்தி எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, சுங்க வரிகள் அல்லது அதுபோன்ற கட்டணங்களை விதிக்கும் சாத்தியக்கூறுகள் ஏதுமின்றி, மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்,” என்று கூறினார்.

ஞாயிறு, 14 ஜூன், 2026

லெபனான் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஆறு பேர் பலி!!

சனிக்கிழமையன்று தெற்கு லெபனானின் பல மாவட்டங்களில் ஜெஸ்ஸின், நபாத்தியா, டயர் மற்றும் மர்ஜாயூன் ஆகிய நகரங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தியது. அல் மயாதீனின் செய்தியாளரின் கூற்றுப்படி, ஜெஸ்ஸின் மாவட்டத்தில் மிகவும் கடுமையான தாக்குதல்கள் நிகழ்ந்தன. 

கஃபார் ஹூனா நகரில் ஒரு வாகனத்தைக் குறிவைத்து ஆரம்பகட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது, அதே நேரத்தில், அந்நகருக்கு அருகிலுள்ள லெபனான் இராணுவ சோதனைச் சாவடியின் சுற்றுப்புறத்தில் மேலும் மூன்று வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

அதே மாவட்டத்தில், அல்-ரிஹான் நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின, அதே நேரத்தில் சோஜோத் நகரின் புறநகர்ப் பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நபாத்தியா மாவட்டத்தில் பீரங்கித் தாக்குதல் மீண்டும் தொடங்கியது, 

அங்கு நபாத்தியா நகரின் ரஹ்பத் பகுதியில் குண்டுகள் விழுந்தன. மேலும் தெற்கே, டயர் மாவட்டத்தில், இஸ்ரேலியப் படைகள் சரிஃபா நகரின் மீது குண்டுவீச்சு நடத்தியதுடன், மாரகே நகரின் மீதும் தாக்குதல் நடத்தின. கியாம் நகரின் மீதான தாக்குதலுடன், இந்த மோதல்கள் மர்ஜாயூன் மாவட்டம் வரை விரிவடைந்தன. 

நாட்டில் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் பாதையைத் தொடர வேண்டும் என்று லெபனான் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

இருப்பினும், இந்த இராஜதந்திர அணுகுமுறை தேசிய அளவிலும் மக்கள் மத்தியிலும் பரவலாக நிராகரிக்கப்படுகிறது. மோதல்கள் தொடரும் நிலையில், பல லெபனான் குடிமக்கள் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வரவிருக்கும் இந்த விவாதங்கள் மிகவும் முக்கியமானவை என்று விவரித்த லெபனான் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இடையேயான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜூன் 22 அன்று வாஷிங்டனில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என லெபனான் அதிகாரப்பூர்வ வட்டாரம் ஒன்று அல் மயாதீனிடம் தெரிவித்துள்ளது. 

 அந்த வட்டாரத்தின்படி, லெபனான் தூதுக்குழுவில் இராணுவ அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். இது, "முன்னோட்ட மண்டலங்கள்" என்று விவரிக்கப்படும் பகுதிகள் மூலம் இஸ்ரேல் வெளியேறுவதற்கான ஒரு கட்டமைப்பைத் தீர்மானிப்பதில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்துவதையும், அதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. 

லெபனான் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும், அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசு தலைமையிலான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும் இணையாக, இந்த முன்னோட்ட மண்டலங்களில் குறிப்பிட்ட இடங்களிலிருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக வெளியேறுவது அடங்கும் என்று அந்த வட்டாரம் விளக்கியது. 

வரவிருக்கும் சுற்று, களத்தில் படைகளைத் திரும்பப் பெறும் ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் லெபனான் இராணுவப் படைகளின் விரிவாக்கப்பட்ட நிலைநிறுத்தத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பிடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று !!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 2026) கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் நேற்று சனிக்கிழமை இதனைப் பதிவிட்ட அவர், ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) உடனடியாக மீண்டும் திறக்கப்படும் என்றும், ஈரான் இனி அணு ஆயுதங்களை நாடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தன்னிடம் மாற்று இறுதி வழிமுறை உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தத்திற்கான இடைஸ்திரப் பணிகளை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மின்முறை (Electronic signing) மூலமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இருப்பினும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் திகதி குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei), அமெரிக்கத் தரப்பின் தயக்கம் காரணமாக உடன்படிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். 

ஆயினும், வரும் நாட்களில் இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து இரு நாடுகளும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

 ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவித்தல், அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல் மற்றும் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் ஆகியன இதில் அடங்குவதாக ஈரான் தரப்பு கூறினாலும், ஈரானுக்கு எந்த நிதியும் வழங்கப்பட மாட்டாது என்றும், அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறான சூழலில், ஈரானின் மஷாத் (Mashhad) நகரில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வெளியே, இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீவிரப்போக்குடைய ஈரானியர்கள் சனிக்கிழமை போராட்டங்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இன்று 

அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thank You Google

Thank You Google
Thanks