வியாழன், 27 பிப்ரவரி, 2025

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க கோரி போராட்டம்!!

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வியாழக்கிழமை தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது. தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். 

யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பமான போராட்டம் அங்கிருந்து, இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்று, அங்கிருந்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்களினால் நீரியல் வளத்துறை அலுவலகம், இந்திய துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் கையளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

ஹாலிவுட் ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி வீட்டில் நாயுடன் இறந்து கிடந்தனர்.

ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் ஜீன் ஹேக்மேன், அவரது மனைவி பெட்சி அரகாவா மற்றும் அவர்களது நாய் ஆகியோர் நியூ மெக்ஸிகோவின் சாண்டா ஃபேவில்...